search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் வேலை நிறுத்தம்"

    கோவை, திருப்பூர், நீலகிரியில் தனியார் ஆஸ்பத்திரிகள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #IndianMedicalAssociation
    கோவை:

    மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவையில் வேலை நிறுத்த போராட்டத்தில் 450-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய மருத்துவமனைகள் பங்கேற்றுள்ளன. 3,500-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து இந்திய மருத்து கவுன்சில் உறுப்பினர் டாக்டர் தங்கவேலு கூறியதாவது:-

    இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. பல கட்டங்களாக பேச்சு வார்த்தை நடத்தியும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டாக்டர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவையில் 450-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. 3500-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளுக்கு எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. அவசர சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேட்டுப்பாளையத்தில் 10 தனியார் மருத்துவமனைகளும் 20 கிளீனிக்குகளும். சிறுமுகையில் 5 மருத்துவமனைகளும் 10 கிளீனிக்குகளும். காரமடையில் 4 மருத்துவமனைகளும் 5 கிளீனிக்குகளும் உள்ளன.

    இங்கு பணியாற்றும் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். ஆனால் போராட்டத்தில் பிரசவம் உள்நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சைகள் வழக்கம் போல் மேற்கொள்ளப்பட்டது.

    புறநோயாளிகள் சிகிச்சை மற்றும் அவசரமில்லா அறுவை சிகிச்சைகள் செய்யப்படவில்லை என்று சங்கதலைவர் திப்பையன், செயலாளர் இளங்கோவன், பொருளாளர் கண்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

    இதேபோன்று திருப்பூர், அவினாசி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 450 தனியார் டாக்டர்கள் உள்ளனர். இவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தலைவர் டாக்டர் பாரதி, செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் கூறும்போது, தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களின் கோரிக்கை நிறைவேற்றகோரி இதற்கு முன்பு ஒருநாள் போராட்டம் நடத்தினோம். அப்போது அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தது. ஆனால் இன்னும் கோரிக்கைகளின் மீது எந்த நடவக்கை எடுக்கவில்லை. அதனை கண்டிக்கும் வகையில் இன்று ஒரு நாள் வெளிநோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கமாட்டார்கள். அதே சமயம் உள்நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு வழக்கம்போல் செயல்படும். ஆனால் டாக்டர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து சிகிச்சை அளிப்பார்கள் என்று கூறினர்.

    நீலகிரி மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரி, கிளீனிக்குகளில் பணியாற்றும் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சைகள் மட்டும் அளிக்கப்பட்டது.  #IndianMedicalAssociation

    ×